நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்!!
2012-06-16 08:21:04
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஓராண்டுக்கு செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் பெற்ற நித்யானந்தா, பொது அமைதியை சீர்குலைத்ததாக நேற்று முன்தினம் மீண்டும் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி ராம்நகரம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீராமரெட்டியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அம்மனு நேற்று மாலை 3.30க்கு விசாரிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நித்யானந்தாவை அழைத்துவரவில்லை என்று போலீ சார் தெரிவித் தார். நித்யானந் தாவுக்கு ஜாமீன்கோரி வக்கீல் முத்துமாலை வாதிட் டார். அதற்கு அரசு வக்கீல் நாகராஜ்ரெட்டி மறுப்பு தெரிவித்தார். நித்யானந்தாவால் பொது அமைதிக்கு சீர்குலைவு ஏற்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக வாதிட்டார். மேலும் 10 நாட்கள் நித்யானந்தாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டுமென்றார். இருதரப்பு வாதம் கேட்ட கலெக்டர் ஸ்ரீராமரெட்டி கூறுகையில், நித்யானந்தா ஒரு வருடத்துக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் அளிக்கவேண்டும். அவர் பெயரில் க்ஷீ 1 லட்சம், இருவர் தலா க்ஷீ 1 லட்சம் பிணை தொகை அளித்து ஜாமீன் பெறலாம். பிணை தொகை செலுத்திய பின்னர் ஜாமீனுக்கான நகலை பெறலாம் என்றார். ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மைசூர் சிறையிலுள்ள நித்யானந்தா இன்று சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விளக்கம்: பெங்களூரில் நேற்று முதல்வர் சதானந்த கவுடா அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காகவும், அமைதியை நிலைநாட்டவுமே நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்தேன். சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களால் சட்டம் ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்பட்டால் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நித்யானந்தாவுக்கு எதிராக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய பிறகே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.
|